About Me

Friday, September 30, 2011

அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாளில் அரசாணை

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. 
மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை, கடந்த 15-ம் தேதி வழங்கியது. மத்திய அரசு வழங்கியவுடன் மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு  வெளியாகவில்லை. இதனால், அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த ஆவல் அரசு ஊழியர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கான கோப்புகள் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான அரசு உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி:

10th Samacheer Kalvi All subjects Blue Print

BLUE PRINT
others

Thursday, September 29, 2011

தமிழ் நாட்டில் வெளிவரும் முக்கிய தமிழ் வார மாத இதழ்கள் பதிவிற‌க்கம் செய்ய இங்கு வாங்க

வாரமலர், குங்குமம், ஆனந்த விகடன்,குமுதம்,ஜீனிய்ர் விகடன்,சக்திவிகடன்,நாணயவிகடன்,வண்ணத்திரைமற்றும் பல்வேறு இதழ்கள் உடனுக்குடன் உங்களுக்காக அப்லோட் செய்யப்பட்டு பிடிஎஃப் வடிவில் கிடைக்கிறது.தளத்திற்கு செல்ல கிளிக் செய்யவும் அங்கு வரும்   கிளிக் செய்தால் உங்களுக்கு அனைத்து இதழ்களும் கிடைக்கும்

ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பொருந்தாது : ஐகோர்ட் தீர்ப்பு

ஒரே பணியாளர்களை இரு கட்ட தேர்தலிலும் பயன்படுத்த முடிவு

வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

கனமழை ; சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை (29.09.2011)

சென்னை மற்றும் புறநகர்ப்பகுகுதிகளில் இன்றூ காலை முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து இன்று சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Thanks : Nakkeeran

லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக அதிகாரி கைது (29.09.2011)

ஆசிரியரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் திருவெண்காடு வடக்குவீதியை சேர்ந்தவர் தங்கேஸ்வரன். இவர் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்., 9ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை :அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான, காலாண்டுத் தேர்வு விடுமுறை, அக்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன.இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி கூறும்போது, "பள்ளிகளில் நடந்து வரும் காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதன்பின், காலாண்டுத் தேர்வு விடுமுறை. விடுமுறைக்குப் பின், அக்., 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது, பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.அக்., 7ம் தேதி வெள்ளிக்கிழமை. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இதை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதி, 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Dinamalar - No 1 Tamil News Paper

சுவிஸ் வங்கி ரகசியங்கள் கருப்புப் பணம் எப்படி உருவாகிறது ?

கருப்புப் பணத்தின் அடிப்படை ஊழல், லஞ்சம், வரி ஏய்ப்பு, அடித்துப் பிடுங்கல், ஏமாற்றுதல், சூழ்ச்சியால் திசை திருப்பல். ஊழலும், ஏய்ப்பும்தான் கருப்புப் பணத்தின் விதை.
சம்பளம் வாங்குபவர்களுக்கு சம்பளத்திலேயே பிடித்தமெல்லாம் போக மிச்சம்தான் கைக்கு வரும். ஆனால் அரசியல்வாதிகள், முதலாளிகள், பெரும் பணக்காரர்கள், சினிமா போன்றவற்றில் இது கிடையாது. அவர்கள் கொடுக்கும் கணக்கிலிருந்துதான் வரி விதிக்கப்படும். இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஏய்ப்பும் ஊழலும். எப்படியெல்லாம் ஏய்க்கிறார்கள். ஊழல் எங்கிருந்தெல்லாம்

Wednesday, September 28, 2011

பூத் சிலிப் குழப்பம் தவிர்க்க கமிஷன் புது கட்டுப்பாடு

பூத் சிலிப் கையொப்பம் இடுவதில், தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 
அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க, சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே நேரடியாக பூத் சிலிப் வழங்கியது. இதனால், ஓட்டளித்த வாக்காளர்களின்

நமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க. (பாகம் ‍ 3)

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.

நமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க. (பாகம் ‍ 2)

உலகிலேயே மிகப்பெரிய கண்டம் ஆசியக் கண்டம்.

உலகிலேயே அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் ஆப்ரிக்கா.

உலகிலேயே மிகப்பெரிய ஓட்டல் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் ஹில்டன் ஓட்டல்.

உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.

இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.

உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.


முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.

ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.

நமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க.(பாகம் ‍- 1)

உலகின் நீளமான நதிகள், அமைந்துள்ள நாடு மற்றும் நீளம்.

1. நைல் - வட ஆப்பிரிக்கா - 4160 மைல்கள்.

2. அமேசன் - தென் அமெரிக்கா - 4000 மைல்கள்.

3. சாங்சியாங் - சீனா - 3964 மைல்கள்.

4. ஹுவாங்கோ - சீனா - 3395 மைல்கள்.

5. ஒப் - ரஷ்யா - 3362 மைல்கள்.

6. ஆமூர் - ரஷ்யா - 2744 மைல்கள்.

7. லீனா - ரஷ்யா - 2374 மைல்கள்.

8. காங்கோ - மத்திய ஆப்பிரிக்கா - 2718 மைல்கள்.

9. மீகாங் - இந்தோ-சீனா - 2600 மைல்கள்.

10. நைஜர் - ஆப்பிரிக்கா - 2590 மைல்கள்.

11. எனிசேய் - ரஷ்யா - 2543 மைல்கள்.

12. பரானா - தென் அமெரிக்கா - 2485 மைல்கள்.

13. மிஸ்ஸிஸிபி - வட அமெரிக்கா - 2340 மைல்கள்.

14. மிசெளரி - ரஷ்யா - 2315 மைல்கள்.

15. முர்ரெடார்லிங் - ஆஸ்திரேலியா - 2310 மைல்கள்.

மனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்


மனித உடலுக்கு இதயம் ஆற்றுகின்ற உன்னத தொழிற்பாடுகள்








நாம் ஒரு நாளைக்கு 23000 தடவைகள் சுவாசிக்கின்றோம். அதன் மூலமாகவும் 450 கன அடி வளியினை உள்ளே எடுத்து வெளியே விடுகின்றோம். அந்த வளியிலிருந்து ஒட்சிசனை எடுத்து, உடம்பின் எல்லா பாகங்களுக்கும் அனுப்பும் வேலையை இதயம் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றது.


நாளொன்றுக்கு ஒரு இலட்சம் தடவைகள் துடிக்கின்ற நமது இதயம் சராசரியாக 70 ஆண்டுகள் உயிர்வாழும் ஒரு மனிதனுக்கு, கிட்டத்தட்ட 250 கோடி தடவைகள் இதயம் துடிக்கின்றது. 24 மணி நேரத்தில், 20000 லீற்றர் இரத்தத்தை இதயம் பாய்ச்சுகின்றது. இதயம் ஒரு முறை இரத்ததை பாய்ச்சுகின்றபோது, 500 மில்லிலீற்றர் இரத்தம் உடலின் பாகங்களில் பாய்ச்சப்படுகின்றது.

thanks
http://sivatharisan.karaitivu.org/

இனி மதிப்பெண் கிடையாது; கிரேடுதான்


சென்னை, செப்.27: வரும் கல்வியாண்டு (2012-13) முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பெண்ணுக்கு பதில் கிரேடு முறை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.  2013-14 கல்வியாண்டு முதல் 9, 10 வகுப்புகளில் இந்த கிரேடு முறை அமலுக்கு வரும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல், ஒரு கல்வியாண்டை மூன்று பருவங்களாகப் பிரித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை.



 
மத்திய அரசு அறிவித்ததைப் போன்று, தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை என நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி உயர்வினை கடந்த 15-ம்  தேதி அறிவித்தது. இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்போவதில்லை என நிதித் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் மீதுள்ள மிகையளவு கடன் சுமையே இந்த அகவிலைப்படி உயர்வு வழங்காமைக்கு காரணம் என நிதித் துறை அதிகாரிகள் 

Tuesday, September 27, 2011

நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்


போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள்

தள்ளிப் போகிறது பத்தாம் வகுப்பு தேர்வு-27-09-2011

NEWS
கோவை: சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, கற்பிக்கும் நாட்கள் குறைந்து போனதால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு 2012 ஏப்ரல் மாதம் நடைபெறலாம் என, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள கல்வியாண்டு காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., ஆட்சியில், முதல் மற்றும் 10ம் வகுப்புகளில் மட்டும் அறிமுகம்

கண்மூடித்தனமாக மனப்பாடம் செய்து வெற்றி பெறமுடியாது

"ஈ அடிச்சான் காப்பி' என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது."இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது' என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், முதல் முறையாக, வரும் மார்ச் மாதம்