சென்னை, அக்.15-தமிழ்நாட்டில்
அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களில் 540 பேர்களுக்கு
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு
நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மாவட்டங்களில் முதன்மை கல்வி அதிகாரி
அலுவலகங்களில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
THANKS : DAILYTHANTHI
THANKS : DAILYTHANTHI