சின்னமனூர் : சமச்சீர் கல்வி முறையில் அரசு எடுத்துள்ள முடிவு குறித்தும், கோர்ட்டில் நடக்கும் வழக்கு குறித்தும் பொதுமக்களின் கருத்து, மனநிலையை அறிய உளவுத்துறை மூலம் ரகசிய சர்வே நடக்கிறது. தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க., அரசு மாறுதல்கள் செய்தும், பெயர்களை மாற்றியும் செயல்படுத்தி வருகிறது. இதில் சமச்சீர் கல்வி முறையை நடப்பு ஆண்டில் கைவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில், இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், பொதுமக்களின் கருத்து குறித்தும், தற்போதைய அ.தி.மு.க., அரசின் இந்த கொள்கை முடிவுக்கு உண்மையில் எதிர்ப்பு உள்ளதா அல்லது தி.மு.க.,விற்கு எப்போதும் சாதகமானவர்கள் என கருதப்படும் ஆசிரியர்களால், ஏற்படுத்தப்பட்ட செயற்கையான எதிர்ப்பா என்பது குறித்தும் உளவுத்துறை மூலம் ரகசிய சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment