About Me

Wednesday, September 14, 2011

செப்., 19ல் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்

மதுரை: பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு செப்., 19, 20ல் சென்னை அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. செப்., 19ல் காலை மாவட்டத்திற்குள் மாறுதல் கேட்கும்
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்போருக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. செப்., 20ல் காலையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் இடமாறுதலும், மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் கவுன்சிலிங் நடக்கும். மதுரை மாவட்டத்தில் பிற வகை ஆசிரியர்களுக்கு செப்., 19ல் மாவட்டத்திற்குள் மாறுதலும், செப்., 20ல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது. ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவுன்சிலிங் நடக்கும்.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: