About Me

Thursday, September 8, 2011

""தொடக்க கல்வித் துறையில, தீவிர வசூல் வேட்டை

""தொடக்க கல்வித் துறையில, தீவிர வசூல் வேட்டை நடந்துண்டு இருக்கு ஓய்...!'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
""நடத்தறது அதிகாரிகளா; ஆசிரியர்களான்னு விளக்கமா சொல்லும் வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.


""அதிகாரிகள் தான் ஓய்... வழக்கமா, ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வைச்சு, சீனியாரிட்டிபடி அவாளோட விருப்பத்தைக் கேட்டு, "டிரான்ஸ்பர் ஆர்டர்' கொடுப்பா... இந்த வருஷம் இன்னும் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை நடத்தாம இருக்கா... ஆனா, தொடக்க கல்வித் துறையில, ஒன்றரை லட்சம், ரெண்டு லட்சம்னு பணம் வசூலிச்சுண்டு, டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுக் கொடுக்கறாளாம்...

""திண்டுக்கல் மாவட்டத்துல நிறைய பேருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுக் கொடுத்திருக்கா ஓய்... இதைக் கண்டிச்சு, ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தியிருக்கு... சங்க நிர்வாகிகள், மாவட்ட அதிகாரிகள்ட்ட கேள்வி கேட்டா,"நானா செய்யலை... உயர் அதிகாரி சொல்லித் தான் செய்யறேன்'னு, பதில் சொல்றாளாம்...'' என்று விளக்கினார் குப்பண்ணா.

நன்றி; டீ கடை பெஞ்சு

Dinamalar - No 1 Tamil News Paper


No comments: