About Me

Monday, October 3, 2011

தேர்தல் அலுவலர்களுக்கு கமிஷன் புதிய உத்தரவு

நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர்களுக்கு, கமிஷன் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
  • தலைவர், கவுன்சிலருக்கு என இரண்டு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அவற்றை இரண்டு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 
  • கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும். 
  • ஒரு ஓட்டுக்கு மேல் பட்டனை அழுத்திவிடாமல் இருக்க கவனமுடன் கண்காணிக்க வேண்டும். 
  • இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • முன்னோட்ட ஓட்டுப்பதிவை செய்து காட்ட வேண்டும். 
  • ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் நாளே, ஓட்டுச்சாவடியில் வந்து தங்க வேண்டும்
என கூறப்பட்டுள்ளது.

நன்றி:  


No comments: