About Me

Monday, October 31, 2011

எங்கள் நண்பனின் திருமண‌ விழா


 
 மனமக்கள்
M.மகாலிங்கம் M.A.,B.Ed.,M.Phil
S.பூங்குழலி BA.,B.Ed.,
 DATE ; 31.10.2011
இறைவன் கொடுத்த வரம் - இரு 
 இனிய உள்ளங்கள்
  ஒன்றாகிய திருமணம்  
திருமண வாழ்த்து  - வாழ்க்கை கவிதை

திருமண வாழ்த்து  

வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.!

மேகமென்னும் கூந்தலினை
மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால்
மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம்
வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே..
அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள்.
கெட்டி மேளம் கொட்டிட தான்.

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.! 

வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்

மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை ராஜ் குமார் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்
சிந்துஜாவின் சொத்தென சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம் ஜியோ எட்ஜ் நட்புகள்

 


No comments: