About Me

Monday, January 23, 2012

1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இந்த கல்வி ஆண்டிலேயே (2011-12) தோற்றுவிக்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

 தமிழகத்திலுள்ள  அனைத்து  குழந்தைகளுக்கும்  தரமான  கல்வி  வழங்குவதே
மாண்புமிகு  தமிழக  முதலமைச்சர்  செல்வி  ஜெ  ஜெயலலிதா  அவர்களின்  தலைமையிலான
அரசின் நோக்கமாகும். குழந்தைகள்  படிக்கும்  பள்ளிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்பு
வசதிகளை  ஏற்படுத்தி,  குழந்தைகள்  கல்வி  கற்க  ஏதுவான  ஒரு  மகிழ்ச்சிகரமான
சூழ்நிலையைப்  ஏற்படுத்த  பல்வேறு  நடவடிக்கைகள்    மாண்புமிகு  தமிழக  முதலமைச்சர்
செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த  வகையில்  அனைத்து  மாணவ,  மாணவியரும்  இடைநிற்றல்  இன்றி  கல்வி  கற்க
ஏதுவாக  அவர்களுக்கு  புத்தகம்,  சீருடைகள்,  கல்வி  கற்க  உதவித்  தொகை,  மிதிவண்டிகள்,
மடிக்கணினி, போன்ற எண்ணற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கு  தரமான  கல்வியை  வழங்குவதில்  ஆசிரியர்களின்  பங்கு  மிக
முக்கியமானது  என்பதில்  மாற்றுக்  கருத்துக்கே  இடமில்லை.    எனவே  மாண்புமிகு  தமிழக
முதலமைச்சர்  செல்வி  ஜெ  ஜெயலலிதா  அவர்களின்  தலைமையிலான  அரசு  எல்லா
பள்ளிகளிலும்  தேவையான  அளவு  ஆசிரியர்  பணியிடங்களை  உருவாக்கி  பணி    நியமனம்
செய்து வருகின்றது.
இதன்  அடிப்படையில்,  அனைவருக்கும்  கல்வி  என்ற  திட்டத்தின்  கீழ்  2009-10
கல்வியாண்டில்  தரம்  உயர்த்தப்பட்ட  831  நடுநிலைப்  பள்ளிகளுக்கு  ஒரு  பட்டதாரி  ஆசிரியர்
வீதம்,  831  பட்டதாரி  ஆசிரியர்  பணியிடங்களும்,  2010-11  ஆம்  கல்வியாண்டில்  தரம்
உயர்த்த்ப்படட  218  நடுநிலைப்  பள்ளிகளுக்கு,  பள்ளி  ஒன்றுக்கு 2  பட்டதாரி ஆசிரியர்கள் வீதம்
436  பட்டத்தாரி  ஆசிரியர்  பணியிடங்களும்,  என  மொத்தம்  1,267  பட்டதாரி  ஆசிரியர்
பணியிடங்களை  இந்த  கல்வி  ஆண்டிலேயே  (2011-12)  தோற்றுவிக்க  மாண்புமிகு  தமிழக
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும்,  பள்ளிகளில்  பயிலும்  மாணவ,  மாணவியருக்கு    அவர்கள்  கல்வி  கற்பதற்கு
ஏற்றவகையிலான  உட்கட்டமைப்பு  வசதிகளை  ஏற்படுத்தும்  நோக்கத்தில்,  அரசு
உயர்நிலைப்பள்ளிகள்  மற்றும்  மேல்நிலைப்  பள்ளிகளில்  பயிலும்  மாணவ,  மாணவியருக்குத்
தேவையான  சாய்வு  மேசை,  நீள்  இருக்கை,  மேசை  மற்றும்  நாற்காலி  முதலான  இருக்கை
வசதிகளை  ஏற்படுத்திட  36  கோடியே  17  லட்சம்  ரூபாயினை  ஒதுக்கீடு  செய்து  மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
********
வெளியீடு:    இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9.
நாள்:          22.1.2012.

No comments: