குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை,
7ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
துணை
கலெக்டர் பணியிடம் - எட்டு, டி.எஸ்.பி., - நான்கு, வணிக வரித்துறையில்,
உதவிக் கமிஷனர் - ஏழு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் - ஐந்து, மாவட்ட
பதிவாளர் - ஒருவர் என, 25 பணியிடங்களை நிரப்ப, கடந்த, 30ம் தேதி,
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என, தேர்வாணையம் அறிவித்திருந்தது.
பின்,
இம்மாதம், 27ம் தேதிக்கு, தேர்வை ஒத்தி வைத்தது. இந்நிலையில், தேர்வுக்கு,
இம்மாதம், 7ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்;
தேர்வுக் கட்டணத்தை, 9ம் தேதி வரை செலுத்தலாம் என, தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment