வேலூர்
மாவட்டத்தில் வரும் மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
தொடங்குகிறது. மார்ச் 27ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது.
இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 301 தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு
வழங்குதல், தேர்வின்போது காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படை, நிரந்த
கண்காணிப்பு படை அமைத்தல் மற்றும் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள்
இயக்குனரகத்தில் இருந்து விடைத்தாள்களை போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு
மையங்களுக்கு எடுத்து வருதல் போன்றவை குறித்து கல்விக்குழு ஆய்வுக் கூட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இந்த
கூட்டத்தில் கலெக்டர் சங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: மாவட்ட கல்வி
அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், இன்ஸ்பெக்டர்கள் கண்டிப்பாக ஒருவருக்
கொருவர் தங்கள் செல் நம்பர்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். மேலும் தேர்வு
எழுதும் மையங்களில் சுகாதாரமான குடிநீர் வசதி, தண்ணீருடன் கூடிய கழிவறை
வசதி இருக்க வேண்டும். அதேபோல் தேர்வு எழுதும்போது மின்சாரம் தடை ஏற்படாமல்
இருக்க முன்கூட்டியே அருகில் உள்ள மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ள
வேண்டும்.
No comments:
Post a Comment