About Me

Monday, December 27, 2010

தமிழகம் முழுவதும் ஏராளமான ஆசிரியர்கள் கைது!

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட ஏராளமான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை அரசு கைது செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறியல் நடத்தப்படும் என்று தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அமைப்பு அறிவித்திருந்தது.

திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments: