About Me

Wednesday, August 31, 2011

புதிய வகுப்பு அறைகள் ரூ.1,082 ரூபாய் ஒதுக்கீடு



சென்னை:""இந்த ஆண்டு புதிய வகுப்பறைகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி திட்டங்களை மேற்கொள்வதற்கு 1,082 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.சட்டசபையில் நேற்று கேள்வி-நேரத்தின் போது நடந்த விவாதம்:குமரகுரு - அ.தி.மு.க: உளுந்தூர் பேட்டை தொகுதி சேந்தநாடு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்குமா?கலைராஜன் - அ.தி.மு.க: தி.நகர் தொகுதி, புதூர் மேல்நிலைப் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து கிடக்கிறது. விளையாட்டு மைதானமும் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது.

காம்பவுண்ட் சுவர் கட்டித்தரப்படுமா? விளையாட்டு மைதானம் பராமரிக்கப்படுமா?அமைச்சர் சி.வி.சண்முகம்: சேந்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு நபார்டு வங்கி திட்டத்தின் கீழ், 12 வகுப்பறைகள், ஒரு ஆய்வுக்கூடம், ஒரு கழிவறை யூனிட், 1 குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள், 43 லட்சத்து 50 ஆயிரத்தில் செய்யப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.
இந்த ஆண்டு, 4,444 வகுப்பு கட்டடங்கள் கூடுதலாக கட்டப்படுகின்றன. இந்த ஆண்டு வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் வசதி திட்டங்களுக்கு மட்டும் 1,082 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: