About Me

Thursday, August 11, 2011

" திருத்தப்பட்ட விடைத்தாளை பார்க்க ஆர்.டி.ஐ., சட்டத்தில் உரிமை உள்ளது'

புதுடில்லி : "தேர்வு எழுதியவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருத்தப்பட்ட தங்களது விடைத்தாள்களைப் பார்ப்பதற்கு உரிமை உள்ளது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தேர்வு எழுதியவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தங்களது விடைத் தாள்களை கேட்டுப் பெற்று, பார்ப்பதற்கு உரிமை உள்ளது என, கடந்த 2009ம் ஆண்டு கோல்கட்டா ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,), மேற்கு வங்க மாநில மேல்நிலை கல்வி வாரியம், மேற்கு வங்க மாநில உயர்கல்வித் துறை, கல்கத்தா பல்கலைக் கழகம் உள்ளிட்டவை, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்வு எழுதியவர்கள் தங்கள் விடைத் தாள்களைப் பார்ப்பதற்கு, உரிமை உள்ளது என, தீர்ப்பளித்தது.

No comments: