About Me

Wednesday, August 31, 2011

லஞ்சம் கேட்பவர்களின் நாக்கு மற்றும் கைகளை துண்டிக்க சட்டம் வேண்டும்: எச்.ராஜா ஆவேசம்


உளுந்தூர்பேட்டை:லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் துண்டிக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென, பா.ஜ., மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசினார்.விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பா.ஜ., சார்பில் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில், மாநில துணைத் தலைவர் எச்.ராஜா பேசியதாவது:ஊழலுக்கு உடந்தையாக செயல்பட்டவர் பிரதமர் மன்மோகன் சிங். ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவுக்கு, ஊழல்வாதியான தாமசை நியமித்துள்ளார். அவர் எப்படி ஊழலுக்கு எதிராக செயல்பட முடியும். இக்குற்றச்சாட்டுகளுக்காக, அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். நாட்டில் ஊழல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.எகிப்து, ஏமன், லிபியா என அரபு நாடுகளில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி கவிழ்ந்தது. அதற்கு குடும்ப ஆட்சி, விலைவாசி உயர்வு, ஊழல் இவையே காரணங்களாகும். இவற்றால் தான், அந்த நாடுகளில் மக்கள் புரட்சி செய்து ஆட்சியை மாற்றினர்.இந்தியாவிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க., அமைச்சர் ராஜா, கனிமொழி சிறையில் உள்ளனர்.

காங்., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயராமல் பார்த்து கொண்டோம்.லஞ்ச, ஊழல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். நாட்டில் லஞ்சம் கொடுக்காத நிலை ஏற்பட வேண்டும்.சட்டப்படி கடமைகளை செய்பவர்களுக்கு எதற்காக லஞ்சம் கொடுக்க வேண்டும். எதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள். 120 கோடி மக்களும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். ஊழல் என்பது சமூக விரோதம். லஞ்சம் கேட்பவர்களின் நாக்கையும், கையையும் வெட்டுவதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்.ஹசன்அலி 70 ஆயிரம் கோடி ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளார். அப்படி என்றால் அவரது வருமானம் எவ்வளவு என்று எண்ணிப் பாருங்கள். வரி ஏய்ப்பு செய்த ஹசன் அலியை ஏன் கைது செய்யவில்லை. அதை விடுத்து இன்று கஷ்டப்பட்டு நடிப்பின் மூலம் சம்பாதித்த மம்முட்டி, மோகன்லால் வீடுகளில், "ரெய்டு' நடத்துகின்றனர். இதன் பின்னணி என்ன என்பதை மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு எச்.ராஜா பேசினார்.

Dinamalar - No 1 Tamil News Paper

2 comments:

rajamelaiyur said...

கண்டிப்பா அப்பத்தான் திருந்துவாங்க ...

rajamelaiyur said...

pls remove word verification option