About Me

Tuesday, November 22, 2011

1,651 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு

தமிழகம் முழுவதும் உள்ள 1,651 இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் அவர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.
இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) வீ.ராஜராஜேஸ்வரி கூறியது:
இந்தக் கலந்தாய்வுக்கு மொத்தம் 1,835 இடைநிலை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 90 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. 94 பேர் பதவி உயர்வு பெற விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, 1651 பேருக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை (நவ.18) நடைபெற்ற கலந்தாய்வில் சுமார் 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. சனிக்கிழமை (நவ.19) நடைபெற்ற கலந்தாய்வில் 447 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி மாறுதல் வழங்கப்பட்டன.
நன்றி:

No comments: