About Me

Tuesday, November 22, 2011

பள்ளிக் கல்வித் துறையில் 57 ஆயிரம் பேரை நியமிக்க ஒப்புதல்: விரைவில் ஆரம்பமாகிறது ஆட்கள் தேர்வு


பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்கள்,சிறப்பாசிரியர்கள்,பகுதி நேர ஆசிரியர்கள், நூலகர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள் என, மொத்தம்56 ஆயிரத்து 853 பேரைநியமிக்க, ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம்மூலம் அவர்களை நியமிக்க, கல்வித் துறைமுனைந்துள்ளது.

வழக்கு:மாநில அளவிலான பதவி மூப்பு மூலம்,ஆசிரியர்களை நியமிப்பதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆட்சியில் இவ்வழக்கில்,அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யாமல் இருந்தது.தற்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் மூலம், பதில்அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்குவிசாரணை, ஜனவரி மாதம்வரும் எனத் தெரிகிறது.இவ்வழக்கின் தீர்ப்பைபொறுத்து தான், வேலைவாய்ப்பு பதிவு மூப்புஅடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதா அல்லது போட்டித் தேர்வுமூலம் நியமிப்பதா என்பது தெரியவரும். எனினும், தற்போதுகட்டாய கல்விச் சட்டம்அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்படி, போட்டித் தேர்வு மூலம் தான்,ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.இந்நிலையில், சுப்ரீம்கோர்ட் முடிவு வரும்வரை, பள்ளிகளில் வழக்கமான சம்பள விகிதத்தில்நியமிக்கப்படும் ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையிலேயே, ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் நியமிக்க, தமிழக அரசு முடிவுசெய்துள்ளது.பகுதி நேர ஆசிரியர்களை பொறுத்தவரை, அந்தந்த துறைத் தலைவர்மூலம், அரசு வெளியிடும்வழிகாட்டுதலின் அடிப்படையில், நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

பணியிட அறிவிப்பு விவரம்*சிறப்பாசிரியராக நியமிக்கப்பட உள்ளவர்களில், தமிழாசிரியர்கள்1,000 பேர் உட்பட,உடற்கல்வி ஆசிரியர்களும் அடங்குவர்.
*பகுதி நேர ஆசிரியர்களில் பெரும்பாலானோர், ஓவியம்,தையல், கைவினை,உடற்கல்வி போன்றபயிற்றுனர்களாக நியமிக்கப்படுகின்றனர்.பள்ளியில் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமெனில், இதற்காகமாதம், 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.இரண்டு பள்ளிகளுக்கும் சேர்த்து ஒருவரேநியமிக்கப்பட்டால்,அவருக்கு, ஆறு மணிநேர வேலைக்கு, 10ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
*கிரேடு-3 தகுதிக்கு,நூலகர்கள் பணியிடங்கள் உயர்த்தப்படஉள்ளன. மேலும், புதிதாக 1,093 நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றைநிரப்ப, வேலைவாய்ப்புத் துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
*ஆசிரியரல்லா பணியிடங்களான துப்புரவுபணியாளர்கள், 5,000பேர் நியமிக்கப்படஉள்ளனர். இவர்களுக்கு மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்வழங்கப்படும். இதில்,3,000 பணியிடங்கள்தான் ஒப்புதல் பெற்றவை. தற்போது, 2,000பணியிடங்கள் கூடுதலாக ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
*உதவி தொடக்க கல்விஅதிகாரி பணியில், 34பேரை நியமிக்க, தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பதவிக்கு இதுவரை, 70ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
*இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படாமல்உள்ள பின்னடைவுஆசிரியர் பணியிடங்கள், 1,800 நிரப்பவும்,அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடம் எண்ணிக்கை
இடைநிலை கல்வி ஆசிரியர்கள் 7,907
பட்டதாரி ஆசிரியர்கள்15,525
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்5,869
சிறப்பாசிரியர்கள்1,538
வேளாண் பயிற்றுனர்கள்25
பகுதி நேர ஆசிரியர்கள்16,549
மேம்படுத்தப்படும் நூலகர் பணியிடம்260
புதிய நூலகர் பணியிடங்கள்1,093
ஆசிரியரல்லா ஊழியர்கள்5,000
நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்831
உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்34
ஆசிரியர் பயிற்றுனர் சீனியர் விரிவுரையாளர்கள்34
இளநிலை உதவியாளர்கள் மற்றும் லேப் உதவியாளர்கள்388
பின்னடைவு பணியிடங்கள்1,800

No comments: