About Me

Sunday, January 1, 2012

40 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக நியமனம்

சென்னை : அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 40 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல்
செய்யப்பட்டனர். தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள, 40 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்தது. பணிமூப்பு அடிப்படையில், 100க்கும் மேற்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். இவர்களில், 40 பேருக்கு, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணி மாறுதல் (இரு பணியிடங்களும் ஒரே நிலை) செய்து, அதற்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர் சங்கர் வழங்கினார்.

No comments: