About Me

Wednesday, January 30, 2013

80 வயது தந்தையை புறக்கணித்த ஆசிரியர் கைது! சஸ்பெண்ட் செய்து கல்வி துறை உத்தரவு!...

தந்தையை புறக்கணித்த, பள்ளி ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர். அவரை, சஸ்பெண்ட் செய்து கல்வி துறை உத்தரவிட்டது.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியை அடுத்த
கரகூரை சேர்ந்தவர் தனபால், 80. இவருக்கு கோவிந்தராஜ், முருகேசன், ரவி என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தனபாலுக்கு சுழற்சி முறையில் உணவு மற்றும் பணம் வழங்கி வந்தனர்.

பாலக்கோட்டை அடுத்த பொப்பிடி அரசு பள்ளியில் ரவி, ஆசிரியராக பணிபுரிகிறார். சில நாட்களுக்கு முன் தனபாலுக்கு, ரவி உணவு மற்றும் பணம் கொடுக்காமல் புறக்கணித்தார்.
இது குறித்து தனபால், மாரண்டஹள்ளி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் விசாரித்து, நேற்று ரவியை கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து ஆசிரியர் ரவியை, டி.இ.இ.ஓ.,கல்யாணசுந்தரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments: