About Me

Thursday, May 15, 2014

அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு

விருதுநகர்: பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறித்து, மாவட்ட வாரியாக
, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு மேல்நிலைப்பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தாலும், சில பள்ளிகளின், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டை விட இந்தாண்டு குறைந்துவிட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களினால், முக்கிய பாடங்களில், மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெறமுடியாமல் போனது. இந்நிலையில், மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

No comments: