About Me

Wednesday, June 11, 2014

பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு நாளாக மாற்ற ஸ்மிரிதி ராணி ஆலோசனை!



நாடெங்கும் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமைகளை விளையாட்டு
நாளாக மாற்ற மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிகளில் சனிக்கிழமைகளில் வேலைநாட்கள் என்று அறிவித்து, அந்த நாளில் பள்ளிகள் வழக்கம்போல இயங்குவது வழக்கம். ஆனால், சனிக்கிழமைகளில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டு நாள்  என்று அறிவித்து, பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுக் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தி, புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விதமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்மிரிதி ராணி ஆலோசித்து வருவதாகவும், இதற்கான முதற்கட்ட வேலைகள் துவங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதன் படி பள்ளிகளில் உள்ள விளையாட்டு வசதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள மாநிலமெங்கும் உள்ள பள்ளிகல்வி துறைகளை சேர்ந்தவர்களுக்கு இதுக்குறித்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments: