About Me

Monday, September 26, 2011

உழைப்பில்லாமல் உயர்வில்லை

* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து நீ தப்பி ஓட முயற்சி செய்யாதீர்கள். வெற்றியா, தோல்வியா என்று சிந்தித்துக் கொண்டிருக்காமல், சேவையில் ஈடுபடுங்கள்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தான்களாக்கி விடுகின்றன.
* பெரியவர்கள் வாழ்வில் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவால் உண்டாகும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவையாகும்.
* ஒவ்வொரு உயிரிலும் தெய்வீக சக்தி ஒளிந்து கிடக்கிறது. அந்த தெய்வ சக்தியை வெளிக்கொண்டு வருவது தான் வாழ்க்கையின் லட்சியம். இதற்காக புறவாழ்விலும், அகவாழ்விலும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.
* அரிய செயல்கள் யாவும் பெரிய உழைப்பின்றி ஒரு போதும் முடிந்ததில்லை. அதனால், இடைவிடாமல் உழைத்து வாழ்வில் உயர்வு பெறுங்கள்.
- விவேகானந்தர்
                                                   

No comments: