About Me

Monday, September 26, 2011

உள்ளாட்சித் தேர்தல் பணி: ஆசிரியர்களுக்கு குழப்பம்

உள்ளாட்சித் தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் ஆசிரியர்கள் வேதனையடைந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட டவுன் பஞ்., தேர்தல் பணிக்காக செப்., 20ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்துள்ளது. அதே ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த யூனியன் அளவிலான தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. 

இதனால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். அக்., 17ம் தேதி வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை மேற்கு, கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி யூனியன்களில் தேர்தல் நடக்கும்போது, அங்குள்ள பேரூராட்சிகளிலும் அதே நாளில்தான் தேர்தல் நடக்கும். அப்படி இருக்கும்போது எப்படி ஆசிரியர்கள் ஒரே நாளில் 2 டூட்டி பார்க்க முடியும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 



அத்துடன் தற்போது காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிப் பணிகள் வெகுவாக பாதிக்கும். எனவே யூனியனுக்கான தேர்தல் பணிக்கு செல்ல முடியாது என மறுத்து வருகின்றனர்.
நன்றி:

No comments: