About Me

Sunday, October 2, 2011

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்கிறது; விரைவில் அரசாணை வெளியாகிறது

கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன்
தற்போது உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அகவிலைப்படியை உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்தார்.
நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார். தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.
அகவிலைப்படி உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசின் அரசாணையை எதிர் பார்த்து தமிழக அரசு இருப்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அகவிலைப்படி உயர்வு விரைவில் வருகிறது. அதற்கான அனைத்து அரசு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
அறிவிக்கப்பட உள்ள புதிய அகவிலைப்படி 7 சதவீதத்துடன் சேர்த்து மொத்தம் 58 சதவீத அக விலைப்படியை இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவார்கள். தட்டு ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீத அக விலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள். 
நன்றி:

No comments: